×

திரிணாமுல் மூத்த தலைவர் முகுல் ராய் மாயம்: யாருக்கும் தெரியாமல் டெல்லி வந்ததால் பரபரப்பு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில் அவர் டெல்லியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகுல்ராய் கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் பாஜவில் இணைந்தார். 2020ம் ஆண்டில் பாஜவின் தேசிய துணை தலைவரானார். 2021ம் ஆண்டு பாஜ வேட்பாளராக கிருஷ்ணாநகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில் மீண்டும் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

இந்நிலையில் திங்களன்று மாலையில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் மாயமானதாகவும் அவரது குடும்பத்தினர் திடீர் புகார் எழுப்பினார்கள். இதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முகுல்ராயின் மகன் சுப்ராங்ஷூ கூறுகையில்,‘‘திங்கட் கிழமை மாலையில் இருந்து எனது தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாதவரை கைது அரசியல் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ” என்றார். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் முகுல்ராய் டெல்லியில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார். சில தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். முகுல் ராய் மீண்டும் பாஜவில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன.

The post திரிணாமுல் மூத்த தலைவர் முகுல் ராய் மாயம்: யாருக்கும் தெரியாமல் டெல்லி வந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Mukul Rai Mayam ,Delhi ,Kolkata ,Congress ,Mukul Rai ,
× RELATED முதல் 2 கட்ட தேர்தலில் பதிவான, தொகுதி...